.comment-link {margin-left:.6em;}

Tuesday, October 14, 2008

 

சந்தை சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி

ரூ 60 கோடி பணப்புழக்கத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி.சந்தை சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி
"போதிய பணப்புழக்கம் இல்லாததே தற்போதைய பிரச்னைக்கு காரணம். பணப்புழக்கத்தைச் சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது." - மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை.

[ பணவீக்கம் 11.80 சதம் என்பது அடுத்த பத்தி செய்தி. இது பிற உலக நாடுகளை விட மிக மிக அதிகம்.]
-- தினமலர் செய்தி
பங்கு சந்தை சரிவிற்கு இவ்வளவு அதிரடி நடவடிக்கை தேவையா? இதன் மூலம் யாரைக் காப்பாற்ற மற்றும் யாரை ஓட்டாண்டியாக்க இந்த முடிவு.
பங்குகளின் விலை அந்தந்த நிறுவனங்களின் உண்மை உற்பத்தித் திறனுக்கு ஏற்றவாறு இருந்தால் இந்த சரிவு ஏற்பட்டிருக்குமா. ஊக வணிகர்களின் குறுக்கு வழி லாபத்திற்காக ஏரிய விலை இறங்கினால் யாருக்கு இழப்பு? எந்த நிறுவங்களின் பங்குகள் வீழ்ச்சியுற்றன, எந்த நிறுவனங்களின் பங்குகள் அவ்வளவாக பாதிக்க வில்லை என்ற விரிவான ஆரய்ச்சி செய்ய வேண்டாமா?
இந்த நிலையில் கவர்ச்சி காட்டி சாமாண்யர்களை பங்குச் சந்தைக்குள் இழுக்கும் முயற்சிதானே இந்த பணப் புழக்க அறிவிப்பு.
நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்காதா? அதிகரிக்கப்பட்ட பணப்புழக்கத்தால் ஏறபடப் போகும் விலை ஏற்றத்தால் பாதிக்கப் படப் போவது யார்.
நாட்டின் உள் கட்டமைப்பு வசதிக்காகவோ, விவசாயமும் தொழிசாலைகளும் எதிர்கொள்ளும் மின்வெட்டு போன்ற பிரச்னைக்கு ஏன் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் இல்லை.
இந்தியத் திருநாடும், சாமாண்ய இந்தியனும் எக்கேடு கெட்டால் என்ன.

பங்குகளின் விலையை அந்தந்த நிறுவங்களின் உண்மை லாபத்திறனுக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் உயர்த்தி விளையாடி பணம் பண்ணும் மோசமான வியாபாரிகள், சுய லாபத்திற்காக இதற்காகத் துணை போகும் நிறுவன முதலீட்டு-மேலாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் காப்பாற்றுவதுதான் இன்றைய அரசின் முக்கியப் பணியாக இருக்கிறது.
பாவம் சாமாண்ய இந்திய மக்கள்

Labels:


This page is powered by Blogger. Isn't yours?