.comment-link {margin-left:.6em;}

Tuesday, March 28, 2006

 

நான் பெற்ற/உணர்ந்த விளக்கம் -1

"காத்து உள்ளபோதே தூத்திக்கொள்"

நேர் விளக்கம்

காத்து அடிக்கும்போது பதரோடுள்ள நெல்லை மேலிருந்து கீலாக கொட்டினால் பதர் நெல்லை விட்டு பிரிந்து காத்திலே பறக்க நெல் மட்டும் தணியாக கிழே சேகரிக்கப் படும். காத்து அடிக்கும் பொழுது இதை செய்து கொள்ள சொல்லி அன்றைய விவசாயிகளுக்கு சொன்னது. ( இப்போது நவீன நெல் ஆலைகளில் ராட்சத மிண்விசிறிகள் மூலம் இது நடக்கிறது)

எல்லோரும் உணர்ந்த விளக்கம்.
சாதகமான சூழ்நிலையை தவறாமல் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

நான் பெற்ற/உணர்ந்த/புதைந்துள்ள விளக்கம்

1. காத்து [ காத்திருந்து ], உனக்கு இதை உணர்த்தும் பெரியோர் உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

2. உனக்கு காத்து [ உயிர் ] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

3. உனக்கு இதை உணர்த்தும் பெரியோருக்கு காத்து [ உயிர் ] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

Comments:
அரிய பெரிய கருத்துக்களைத் தர வந்திருக்கும் உங்களை வலைப்பூவுலகுக்கு வருக வருக என வரவேறு மகிழ்கிறேன்.
 
//அரிய பெரிய கருத்துக்களைத் தர வந்திருக்கும் உங்களை வலைப்பூவுலகுக்கு வருக வருக என வரவேறு மகிழ்கிறேன்.//

அரிய பெரிய கருத்துக்களைத் தர வந்திருக்கும் உங்களை வலைப்பூவுலகுக்கு வருக வருக என வரவேற்று மகிழ்கிறேன்

முதலில் கவனக்குறைவால் நிகழ்ந்த எழுத்துப்பிழைக்காக வருந்துகிறேன்.
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?